Saturday, September 10, 2011

அவனுக்கென்ன...

சற்று  தொலைவில்
காணல் நீர் 
என் கால்களோ
புதை மணலில்.
தொண்டைக்குழியின் 
கடைசி சொட்டு
ஈரத்தையும் உறுஞ்சுகிறது
கருணையற்ற  சூரியன்.
தீப்பெட்டி இரவல் 
வழிப்போக்கனிடம்
எப்படி சொல்வேன் 
என் கண்ணீர்
பெட்ரோலைவிட 
அபாயகரமானது என்று.
மேலும்
புகை பிடிக்கும் பழக்கம் 
இல்லையென்று




No comments:

Post a Comment