புதிது போல
தோன்றி
வழக்கம் போலவே
முடிகின்றது
ஒவ்வொரு நாளும் .
அதே சூரியன்
அதே நிலா
அதே மேகம்
அதே பாதை
அதே பயணம்
நம்பி
ஆக வேண்டிய கட்டாயம்
துரோகம்
செய்தே தீர வேண்டிய சூழல்
அவரவர் வாழ்க்கை
அவரவர்க்கு
ஆனாலும்
அதே மாதிரி தான்
இருக்கிறது வாழ்க்கை
முன்
எது மாதிரி இருந்ததோ
அது மாதிரி.