எடை கற்களாய்
உன் இதயம்
எடை பொருளாய்
என் இதயம்
நடுவில்
தராசு முள்ளாய்
துடிக்குதடி
நம் காதல்.
கையில்தான் உள்ளது
எடைபடும் பொருளின் மதிப்பு .
வாழ்க்கைத் தராசு
உன் கையில்
நிகழாத ஒரு குற்றத்தை
நிருபிக்கவேண்டியவள் நீ
எந்த தண்டனைக்கும்
தயாராக இருக்கும்
நான்
யார் என்பதை
சொல்லவேன்டியவளும் நீ
தராசின் பாரம்
தாங்க முடியவில்லை
என்பதற்காக
நீதியை தள்ளி வைக்காதே
குற்றம் செய்தால்தான்
நீதிதேவதையை நேரில் பார்க்க முடியுமென்றால்
எந்த மாதிரியான குற்றத்தை
எதிர்ப்பார்க்கிறாய்
----சிராஜ்