Tuesday, October 12, 2010

சுயம்பு

 நூறு சதவீதம் பொருத்தமான
அழகிய பெண்ணொருத்திய
சந்திக்க தவறிய கணத்திலிருந்து


தனிமையின் துயரம் சுமந்த
மேகம் ஒன்று.
தனக்கான விளைநிலம் தேடி
காற்றின் திசையெங்கும்
மிதந்து கொண்டிருக்கிறது.

எல்லா தேடுதலும் தொலைந்த பிறகு
உஷ்ண மூச்சில்
தீயாய் எரியும் தேகம்
இரவுகளில் வெப்பமாகி புழுங்கும்
மண்ணறைக்குள் மட்கும்
பிரேதத்தைப் போலவே மாறும்.

பின்னிரவில் ஸ்கலிதமாகும் துளி பிசைந்து
விடியலில் மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுகிறேன்.
ஹவ்வாக்கள் இல்லாத சூன்யத்தின்
ஆதாமாய்..,